மே மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்! பைசர் முஸ்தபா

எதிர்வரும் மே மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.

மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சோமவீர சந்திரசிறி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் போது மே மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் முஸ்தபா பதிலளித்துள்ளார்.

இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.