தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறவும் முடியாது, வெளியேற்றப்படவும் முடியாது. இதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கவும்மாட்டார்கள்.

தலைவர்கள் இதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என முன்னாள்வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

அண்மையநாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள், ஏனைய தமிழ்கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியான அறிக்கைகள், விமர்சனங்களை பரஸ்பரம் முன்வைத்துவருகின்ற நிலையில் தனது ஆதங்கத்தையும் கவலையையும் இவ்வாறு வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணி அபகரிப்பு, கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் பிரச்சினை என ஆயிரம்பிரச்சினைகளை எமது மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற வேளையில், வீதிக்குஇறங்கியிருக்கின்ற நிலையில் நாம் புதிய தலைமையைப் பற்றி பேசுகின்றோம். கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது பற்றி பேசுகின்றோம், வெளியேற்றப்பட வேண்டும்என பேசுகின்றோம்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக ஐக்கியப்பட்ட ஓர்அமைப்பிலிருந்து விடுதலைப் புலிகளின் பேராதரவோடு உருவாக்கப்பட்ட, தமிழ்மக்களால் ஜனநாயக முறைப்படிதேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பிலிருந்து யாரும்யாரையும் வெளியேற்றவும் முடியாது, வெளியேறவும் முடியாது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்கூட்டமைப்பில் இல்லாமல் சென்றமையானது துரதிஷ்டமே.

கஜேந்திரகுமார்பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற தலைவர்கள் பாராளுமன்றில் இன்றுஇல்லாதது மிகப் பெரிய வெற்றிடங்கள் என்பதை மறுக்கவும் முடியாது.

இருந்திருந்தால்கூட்டமைப்பினதும்,தமிழ் மக்களினதும் பலம் கண்டு உலகம் வியந்திருக்கும்.அதேபோல் கூட்டமைப்பை உருவாக்க அச்சாணியாக இருந்தவர்கள் முன்னாள் போராளிகள்என்ற அடைமொழிக்குள் அந்நியப்பட்டு போயுள்ளார்கள். அவர்களையும் அரவணைத்து அரசியல்பயணத்தை முன்னெடுக்க நாம் தயங்கி நிற்பது வேதனைக்குரியது.

கடந்த காலங்களை மறந்து, எமது ஒற்றுமையீனம் காரணமாக நாம்இழந்தவற்றை மறந்து, விலகியிருப்போரையும் இணைத்துக் கொண்டு ஒரு பலமான அரசியல்சக்தியாக மக்கள் முன் நிற்க வேண்டிய நிலையை மறந்து இருக்கின்ற ஒற்றுமையையும் இழந்துவிடுவதற்கு சபதம் எடுக்கின்ற முனைப்புக்கள் எமது மக்களுக்கும், எமதுதியாகங்களுக்கும் செய்கின்ற துரோகங்களாகும்.

மிகப் பெரிய ஜனநாயக கட்டமைப்பானாலும் ஒழுங்குபடுத்தலின் குறைபாடுகளால்முரண்பாடுகள் தோன்றுவதும், தோற்றுவிக்கப்படுவதும் இயல்பானதே.இது பேசித் தீர்க்கப்படவேண்டியவையே ஒழிய முற்றிவிட செய்ய முயலக் கூடாதவை.

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின் பின் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள்ளும் முரண்பாடுகள் முற்றியிருப்பது இரகசியமானதல்ல.

தமிழ் மக்கள் பேரவையும், எழுக தமிழ் நிகழ்வுகளும் காலத்தின்தேவை என்பதை சமகாலஅரசியலை அறிந்திருக்கும் அனைவருமே ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இருப்பினும் பேரவையானது அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்ற அமைப்பாக இருப்பதுகேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

வடக்கு முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பின்அங்கத்துவக் கட்சிகள் பேரவையிலும் சங்கமித்துப் போயுள்ளமையானது கேள்விக்குரியசந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளிருந்து மக்கள்போராட்டங்களைமுன்னெடுக்க முடியாதானால் அதற்குரிய சூழலைஉருவாக்க முயல வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையானது கூட்டமைப்புக்கும், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுக்கும்அழுத்தம் கொடுக்கக் கூடிய ஓர் அமுக்கக் குழுவாகவே செயற்பட வேண்டும். அரசியல்கட்சிகள் சார்ந்ததாக இருக்க முடியாது.

இவ் அமைப்பானது முதலமைச்சர் உட்படபேரவையின் இணைத்தலைவர்கள், அரசியல்சார்ந்ததோ, தேர்தல் அரசியல் சார்ந்ததோ இல்லை என சத்தியம் செய்தாலும் அதன்உண்மைத் தன்மையை பலர் சந்தேகக் கண்கொண்டே பார்ப்பது ஒன்றும் மறைக்கக்கூடிய விடயமல்ல.

பேரவையானது பல கல்விமான்களையும், புத்திஜீவிகளையும், அனுபவஸ்தர்களையும், சிவில்அமைப்புக்களையும் கொண்ட அமைப்பாகஇருக்க வேண்டுமேயொழிய அரசியல்வாதிகளை கொண்ட அமைப்பாக இருக்க கூடாது. அது ஓர்சுயமான அமைப்பாக செயற்பட வேண்டும்.

இன்று முதலமைச்சர் வடக்கு மாகாணசபையிலும் இருக்கிறார், பேரவையிலும் இருக்கிறார்.கூட்டமைப்பிலும் இருக்கிறார். இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டும் நோக்கில்அரசியல்தீர்வுக்கான திட்ட வரைபுகளை மத்திய அரசாங்கத்துக்கு வழங்குகின்ற போது ஒரே வரைபினை எப்படி வழங்க முடியும்.

மூன்றும் வெவ்வேறான வரைபுகள் என்றால் ஒருவரால்எப்படி முரண்பட்ட திட்ட வரைபுகளுக்கு அனுமதியோ ஆதரவோ வழங்க முடியும்.

இங்கு வருகின்ற முரண்பாட்டு நிலையினை மத்திய அரசு தட்டிக்கழிக்கவோ, மறுக்கவோ நாம் வாய்ப்பினை வழங்கி விடுகிறோமல்லவா?

எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த அனைவரும் முரண்பாடுகளையும், பகைமைகளையும் மறந்து ஒன்றுபட்டேயாக வேண்டும்.

தமிழ் மக்களின் ஒரே பலத்தை உடைத்துநொருக்க யாருக்கும் அனுமதி வழங்க யாரும் முயலக்கூடாது.

மிகவும்பெறுமதியான, தீர்மானிக்கும் ஆண்டான இவ்வாண்டு கடந்தாண்டு போல எம்மை ஏமாற்றிச்செல்ல எமது தலைவர்கள் இடங் கொடுக்கக்கூடாது.

புலிகள் இல்லாததால்தான் இவர்கள் இப்படி ஆடுகின்றார்கள் என்று மக்கள்முணுமுணுப்பது எங்கள் தலைவர்களின் காதுகளுக்கு மட்டுமே கேட்கட்டும். என்றுகூறியிருந்தார்.