அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் இந்தியாவின் ஹைதராபாதைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரால் இனவெறியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் ஒரு இந்தியர் உள்பட 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்.
இத்தாக்குதலில் பலியான இளைஞரின் மனைவி சுனயானா டுமாலா நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது ,”அமெரிக்காவில் தங்கியிருந்து பணியாற்றுவது குறித்து முதலில் நான் தயங்கினேன். ஆனால் எனது கணவர்தான், அமெரிக்காவில் நாம் தங்குவதால் நல்லதே நடக்கும் என்றார்.
இதுபோன்ற சம்பவங்கள், அமெரிக்காவில் தங்கியிருக்கும் சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்துகிறது. எங்களுக்கு இங்கிருக்க தகுதியில்லையா? இனியாவது பிற நாட்டவர்களை இனவெறியுடன் அனுகாதீர்கள்” என்றும் அவர் உருக்கத்தோடு கூறியுள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அமெரிக்க அரசு எந்த விதமான நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்றே வியப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.