கடும் கோபத்தில் கோத்தபாய ராஜபக்ச!

நல்லாட்சி அரசாங்கம் தன்னை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக தான் அதிருப்பதியை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் சந்தஹிருசாய தூபி நிர்மானத்தின் போது அங்கு உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்ட தங்கம் தொடர்பான விசாரணைக்காக நிதி மோசடி விசாரணை பிரிவிற்று நேற்று சென்றிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சந்தஹிருசாய நிர்மானத்தின் போது உள்ளே கிலோ கணக்கான தங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.