அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் சுமந்திரன்!

சிங்களவர்கள், ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு நீதியை வழங்க மறுத்தால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு 13ஆவது திருத்தச்சட்டத்தைப் போன்றதாக இருக்கக் கூடாது.

அது சிங்கள மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றாகவும் அமையக் கூடாது.

சிங்கள மக்கள் தமிழர்களுக்கு நீதியை வழங்க மறுத்தால், அவர்களைத் தமிழர்கள் ஆளமுடியாமல் செய்வார்கள் என்று ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

நாங்கள் மீண்டும் வன்முறைக்குத் திரும்பவோ, மீண்டும் ஆயுதம் ஏந்தவோ போவதில்லை.

ஆனால், எம்மால் ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.