தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற காணிகள் விடுவிக்கப்படும்!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென கருதும் வடக்கு கிழக்கில் பிரதேசங்களிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவின் இறுதிநாள் நிகழ்வு நேற்று கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 33 ஆயிரத்து 584 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளது.

மேலும் மூவாயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் காணாமல் போனோர் குறித்த விசாரணைகள் சில வேளைகளில் வருடக்கணக்கிலும் செல்லலாம். இந்த விடயத்தில் காலக்கெடு வழங்க முடியாது.

எவ்வாறெனினும், காணாமல் போனோர் விடயத்தில் வினைத்திறன் மிக்க தீர்வுகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாவும் அதனடிப்படையிலேயே காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.