அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வராக வாய்ப்பே இல்லை என்று, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
சசிகலா, முதலமைச்சராக பதவியேற்கும் பணிகளை அதிமுக வட்டாரங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருங்கின்றன. இந்நிலையில், சசிகலா பதவியேற்பு மத்திய அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அவர் முதலமைச்சராக பதவியேற்பது உறுதி என்று, அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி, இதுகுறித்து , டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “சசிகலா முதலமைச்சராக வாய்ப்பே இல்லை என்றும், அவர் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக, ஜாதகத்தில் கூறியிருந்தால் அது தவறான கணிப்பு என்று சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். மேலும், பிப்ரவரி 9ம் தேதிக்குப் பிறகு இதன் முழுவிவரம் தெரியவரும்,’’ என்றும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.