ஜெயலலிதா இறந்த நிலையிலேயே அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக அப்பல்லோ பெண் மருத்துவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் ஜெ.தீபா பேரவை கூட்டத்தில் அப்பல்லோ பெண் மருத்துவர் ராமசீதா கலந்து கொண்டு பேசினார்.
செப்டம்பர் 22ம் திகதி ஜெயலலிதாவை இரவு கொண்டுவரும் போதே நாடித்துடிப்பு இல்லை என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அப்பல்லோவில் அனுமதித்து 20 நாட்கள் கழித்து எம்ஜிஆர் சமாதிக்கு அருகே இடத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே அப்பல்லோவிலிருந்து விலகியதாகவும், இந்த உண்மைகளை விசாரணை கமிஷன் முன்பு கூற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.