கோத்தபாயவின் இருபாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாடு செல்லத்தடை!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

29 மில்லியன் ரூபா பணத்தை துஸ்பிரயோகம் செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத்தில் கடமையாற்றி வரும் லக்ஷ்மன் திலகசிறி மற்றும் உபுல் தர்மதாச ஆகியோருக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல் நகரில் கொன்சியூலர் காரியாலயத்தில் கடயைமாற்றியுள்ளதாகவும், இவ்வாறு கடமையாற்ற பாதுகாப்பு அமைச்சினதோ அல்லது இராணுவத்தினதோ அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்தக் காரியாலயத்தில் கடமையாற்றிய போது 29 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.