சுமந்திரனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணிப்புரை!

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை பாரளுமன்றத்தில் சபை கூடியபோது விசேட அறிவித்தலொன்றை விடுத்து சபாநாயக்கர் இதனை தெரிவித்துள்ளார்.

‘’பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான நிலைமைகள் தொடர்பாக அவரும் மற்றும் மற்றைய எம்.பிக்களும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அதற்கமைய அவரின் பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கையெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.’’ என தெரிவித்துள்ளார்.