தான் பெற்ற பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழை வழங்க மறுப்பது போன்றே சைற்றம் மற்றும் அம்பாந்தோட்டை அபிவிருத்திகள் தொடர்பான மஹிந்தவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் சரத் அமுனுகமவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாலபே சைற்றம் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் அம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் ஆகியன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவையெனவும் அதனை அவர் தற்போது எதிர்ப்பது பிள்ளை பிறந்த பின்னர் பிறப்பு சான்றிதழை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறுவது போன்றுதான் இருக்கின்றது.
இதனால் அவரே இதனால் இந்த வேலைத்திட்டங்களால் கிடைக்கும் பலன் எதுவாக இருந்தாலும் மஹிந்த அதனை பொறுப்பேற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.