அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை உபகுழு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அக்குழுவின் உறுப்பினர் அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன் பிரகாரம், நாட்டரிசி ஒரு கிலோகிராமிற்கு 70 ரூபா எனவும் சம்பா அரிசி ஒரு கிலோகிராமிற்கு 80 ரூபா என்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.