திங்களன்று தமிழக முதல்வராகிறார் சசிகலா?

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள வி.கே.சசிகலா எதிர்வரும் திங்களன்று முதல்வராக பதவியேற்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை பொறுக்கி என குறிப்பிட்டு வரும் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதவில் கூறியதாவது,

எதிர்வரும் திங்களன்று சசிகலா முதல்வராக பொறுப்பேற்றால், அவர் பொறுக்கிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சசிகலா கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தேர்ந்தெடுத்து சுமார் 23 பேருக்கு புதிய பதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இதற்கும் அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நாள் முதலே, மக்கள் ஏற்கவிட்டாலும் காட்சியில் உள்ள அவரின் சில ஆதரவாளர்கள் சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.