குளிர் நீர் குளியல் பிரியர்களா நீங்கள்? உங்களுக்கு ஆபத்து அதிகம்!

குளிர் நீர் குளியல் பிரியர்களுக்கு :

* காலையில குளு,குளுனு தண்ணிய எடுத்து உச்சந்தலையில ஊத்துறதுனால, உடம்புல உள்ள நரம்பெல்லாம் ‘சிலிர்த்து’ மூளை ஸ்பீடா வேலை செய்யுமாம்.

* நம்ம இரத்தத்துல உள்ள லிம்போசைட்ஸ் – ன்ற கிருமியை அழிச்சு, நோய் வராம பாதுகாத்துக்கலாம்.

* உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை ரிமூவ் பண்றதால, ஆயுள் முடியுற வரைக்கும் ஆரோக்கியமா இருக்கலாம்.

* இயற்கையாகவே நம்ம தலையில ஒரு எண்ணெய் சுரக்குமாம். “ஜில்லு” தண்ணியில குளிச்சா இந்த எண்ணெய் எப்பவும் போல சுரந்து வழுக்கை விழாம, ‘மண்ட பத்திரமா’ இருக்குமாம்.

சுடு நீர் குளியல் பிரியர்களுக்கு :

* மழைக்காலத்துல “ஜம்முனு” ஒரு ஹாட் பாத் எடுக்கிறது தாங்க பெஸ்ட். ஏற்கனவே, மழைதண்ணியில நனஞ்சுருந்தா அதுல கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்கும். ஸோ, அத அழிக்க, உடம்புல சூடா தண்ணி படுறது தான் நல்லது.

* சுடு நீர்ல குளிக்கிறதுனால, நம்ம தோல்ல இருக்கிற, கண்ணுக்குத் தெரியாத குட்டி,குட்டி ஓட்டைகள்ல இருக்க அடைப்பை நீக்கி உடலை ரொம்ப சுத்தமா வச்சுக்கலாம்.

* “மைக்ரேன்” னு சொல்லப் படக்கூடிய ஒருபக்கத் தலைவலி “டெம்ப்ரவரி” ஆக சரி ஆகுமாம். * ஈவ்னிங் டைம் எடுக்கிற ‘ஹாட் பாத்’ னால, தசை நார்கள் எல்லாம் தளர்வாகி, பாடி ரிலாக்ஸா ஃபீல் ஆகுமாம். அதனால, ராத்தூக்கம் கும்முனு வருமாம்.