நீண்ட நாட்களின் பின்னர் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அரசியல் களத்தில் குதித்துள்ளார்.
இந்த அரசியல் பிரவேசம் அவருடைய மரணத்திற்காக அறிகுறியா என்ற பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்குனர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விநாயகமூர்த்தி முரளிதரன் ஏற்கனவே இவர் அரசியலிலும் சரி சமூகத்திலும் அநாதையாக்கப்பட்டு உயிர் பாதுகாப்பு தேடி வெளிநாட்டிற்கும் சென்றிருந்தார்.
அச்சமயம் அவருக்கு அடைக்கலம் கொடுத்து மீண்டும் அவரை அரசியல் முக்கியஸ்தராக மாற்றிய பெருமை என்னவோ மகிந்தவையே சாரும் அதே நிலையை மீண்டும் மகிந்த ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்.
இதன் உள்நோக்கம் அவர் கருணாவை முன்னிலைப்படுத்தி தனது அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளும் திட்டம், அதே சயமம் தான் கருணாவின் நண்பன் என பகிரங்கமாக வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சியே.
இல்லாவிடின் விநாயகமூர்த்தி முரளிதரனை மீண்டும் திடீரென கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு குறித்து கேருத்து வெளியிட அவசியம் இல்லை.
இந்த நிலையில் பொன்சேகாவுக்கு கொடுக்கப்பட்ட விருது போன்று கருணாவிற்கும் கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு இந்த கோரிக்கை வெளியிடப்படும் முன்னரே பொன்சேகா புலிகளை அழிக்க எந்த உதவியும் செய்ய வில்லை என தெரிவித்திருந்தார்.
ஆனாலும் புலிகளை அழிக்க முக்கிய கருணா அளப்பரிய உதவியை செய்தார் எனவும் தென்னிலங்கை தரப்பு தெரிவித்து வந்தது. அந்த கருத்தின் அடுத்த கட்ட நகர்வே கருணாவிற்கு விருது வழங்க வேண்டும் என்பது.
இதற்கு காரணம் மீண்டும் கருணா முக்கிய புள்ளியாக மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தப் படவேண்டும் அதற்கான செயப்பாடுகளே இவை.
குறிப்பாக இப்போது கூறப்படும் முக்கிய விடயங்கள், விடுதலைப்புலிகள் மீண்டும் வந்து விட்டார்கள், புலிகள் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ள திட்டம் தீட்டுகின்றார்கள், தமிழ் அரசியல் தலைவர்களை குறிவைத்துள்ளார்கள்.
இந்த கருத்துகளின் அடிப்படை அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்துவது, அதற்காக மக்கள் மத்தியில் புரளியை ஏற்படுத்தி அரசியல் இலாபங்களை ஏற்படுத்தி கொள்வதே.
இவற்றோடு கருணாவின் திடீர் கைது, அவரின் மீள் வருகை, புலிகள் மீண்டும் வருகின்றார்கள் அடுத்தடுத்த கொலை அச்சுறுத்தல் கதைகள் போன்ற அனைத்தும் நோக்கப்பட வேண்டிய அவசியம் உண்டு.
அனைத்தின் பின்னணியிலும் இருப்பது அரசியல் மாற்றமும், அதிகார மோகமுமே. அரசியலுக்காக கொலைகள் என்பது இலங்கைக்கு புதிதல்ல என்பதும் சுட்டிக்காட்டப்படத் தக்கது.
இவை இப்படி இருக்க அரசியலில் இறக்கப்போகும் அந்த முக்கியஸ்தர் கருணாவாக கூட இருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது விடுதலைப் புலிகளுக்கு பிரதான எதிரியாக வர்ணிக்கப்படுகின்றவர் கருணா. இப்போது அவர் கொலை செய்யப்பட்டால் அந்தப்பழி கட்டாயம் புலிகளையே சாரும்.
அதன் மூலம் மக்கள் மத்தியில் புலிகள் வந்து விட்டார்கள் என்ற கருத்து ஆழமாக பதியப்பட்டு விடும் என்பது வெளிப்படை.
இது நிறைவேற்றப்பட்டு விட்டால் தென்னிலங்கையில் அரசியலில் மாற்றம் ஏற்படுத்துவது மிக மிக எளிது என்பது அனைவரும் அறிந்ததே.
அடுத்தடுத்து அரசியல் தலைவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதற்கும், கருணாவை மேடையேற்றி தமிழில் உரையாற்ற வைத்ததற்கும் பிரதான காரணமும் இதுவே.
அதேபோல் கருணாவின் பாதுகாப்பு தொடர்பில் புதிதாக எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு நோக்கப்பட வேண்டியது என்ன வெனில்..,
யுத்தம் முடிந்து இத்தனை வருடங்கள் கடந்து கருணாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது வேடிக்கையான விடயம்.
அந்த வகையில் கருணா இப்போது கொலை செய்யப்பட்டால் பழி புலிகள் மீது செல்லும், அரசு மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை அற்ற தன்மை ஏற்படுத்தப்படும்.
அடுத்து புலிகள் வந்து விட்டார்கள் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இலகுவாக புகுத்தப்படும். இந்த அனைத்தும் நிறைவேற்றி விட்டால் ஆட்சிக்கு இன்னும் 3 வருடங்கள் அவசியமே இல்லை மக்கள் எழுச்சியே வீட்டுக்கு அனுப்பிவிடும் நிலை ஏற்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் அடிப்படையே இப்போது படிப்படியாக அரங்கேற்றப்பட்டு கொண்டு வரப்படுகின்றது எனவும் அதற்காக விரைவில் கருணா கொலை செய்யப்படக்கூடும் எனவும் அரசியல் அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.