பிரித்தானியாவை பனிப்புயல் தாக்கும் அபாயம்: கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் பிப்ரவரி மத்தியில் பனிப்புயல் தாக்கும் பேராபத்து எழுந்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் காலநிலை தொடர்ந்து அபாய நிலையில் நீடிப்பதால் எதிர்வரும் 2 வாரங்கள் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த காலகட்டங்களில் 70mph அளவுக்கு காற்று வீச்க்கூடும் எனவும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

மட்டுமின்றி உயிரிழப்பு விகிதமும் இந்த முறை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காற்றின் திசை வடக்கு அல்லது கிழக்கு பகுதியை நோக்கி உள்ளதால் அதனால் மிக கடுமையான குளிர் சூழ வாய்ப்பு அதிகரிப்பதாக கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பிப்ரவரி மாதங்களில் வானிலை -8C ல் இருந்து -18C வரை குறைந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள், இந்த காலகட்டங்களில் முதியவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த காலகட்டத்தில் இருதயம் தொடர்பான நோய்கள், மார்பு தொடர்பான நோய்கள், வலிப்பு உள்ளிட்டவை முதியவர்களை அதிகமாக பாதிப்புக்கு உள்ளாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.