இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட ரஷ்யர்கள் கைது!

பலபிடிய கடற்கரைப் பகுயில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வெளிநாட்டு பிரஜைகளை கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் மீன் பிடிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்களை கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.