சுக்கிரன் தோஷத்திற்கான பரிகார தலம்

சென்னைக்கு தெற்கே இருக்கும் மாங்காட்டில் உள்ள மிகவும் பழமையான கோவில் திருவல்லீஸ்வரர் (வெள்ளஸ்வரர்) ஆலயம். நவக்கிரக தலங்களில் சுக்ரனுக்குரியதாக இத்தலம் விளங்குகிறது. சுக்ராச்சாரியாரால் பூஜிக்கப்பட்ட இத்தல இறைவனை, தமிழில் வெள்ளஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

இத்தலத்து வில்வ மரத்தடியில் பெரிய அளவிலான பாண லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் மகா வில்வம். கண் சார்ந்த குறைபாடுகள் உடையவர்கள் வெள்ளஸ்வரரை, வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்டு வந்தால், அவர்களது குறைகள் நீங்கப்பெறுவதாக ஐதீகம். சுக்ரனின் சாரம் பெற்ற பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்களில் சுக்ரனுக்கு பரிகார பூஜைகள் செய்தும் மகிழ்ச்சியான வாழ்வை அடையலாம்.