சர்க்கரைவள்ளி கிழங்கை பச்சையாக சாப்பிடுவது நல்லதா?

கிழங்கு வகை உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான சுவையான கிழங்கு தான் சர்க்கரைவள்ளி.

இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து, பொரியல், சாம்பார், கூட்டு என்று பல வகையில் சமைத்து சாப்பிடலாம்.

இந்தக் கிழங்கில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே இதை பச்சையாக சாப்பிடுவதால் கூட பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, மினரல் சத்து, விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுக்கள் ஆகிய அனைத்தும் நமது உடம்பில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புக்களை குறைக்கிறது.
  • சர்க்கரைவள்ளி கிழங்கு நீரிழிவு நோயாளிகளுக்கு, மிகவும் ஏற்ற சிறந்த உணவாகும். ஏனெனில் இது உடம்பில் இருக்கும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
  • சர்க்கரைவள்ளி கிழங்கில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற மினரல் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவை நமது உடலில் புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது.
  • சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் சத்துக்கள் நமது கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இவை நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
குறிப்பு

சர்க்கரைவள்ளி கிழங்கை பச்சையாக அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் சில மூலக்கூறுகள் புரதத்தை செரிமானம் செய்வதில் சிக்கலை ஏற்படுத்தி, வாயுத்தொல்லை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.