ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கட்டம் இதுவா?

ஆப்பிள் நிறுவனம் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திட்டம் பற்றி தெரியவந்துள்ளது.

அந்த கடிதத்தில்,’தானியங்கி தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட ஆர்வமாய் உள்ளோம்.’ என்று கூறியுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில்,’தானியங்கி தொழில்நுட்பத்தில் விரைவில் நிபுணத்துவம் பெற, இதில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் சில தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.

அதே வேலையில், எந்த நிறுவனத்தின் தனித்துவமும் இதனால் பாதிக்கப்படக் கூடாது.’ என்று கூறியுள்ளது.

இதுவரை ஆப்பிள் நிறுவனம் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் கசிந்தாலும், இப்போது தான் அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனமே இந்த விஷயம் பற்றி அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் நேரடியாக தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் ஈடுபடாமல், அதன் மென்பொருளை மட்டும் ஏதாவது ஒரு பெரிய கார் தயாரிப்பளர்களுக்கு கொடுக்கும் எனக் கூறப்படுகின்றது.