கேரட் அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட கேரட்டில் விட்டமின் A, B1, B2, B6, K, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

நமது உடல் நலத்திற்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் கேரட் கொண்டுள்ளது. எனவே இதை நாம் உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால், நல்ல பார்வை மட்டுமின்றி, வேறு சில உடல் பிரச்சனைகளும் நம்மை தாக்காமல் தடுக்கலாம்.

கேரட்டை அதிகமாக சாப்பிடுவதால் என்ன நடக்கும் ஆய்வின் தகவல்

ஆய்வுகளின் மூலம் கேரட் அதிகம் சாப்பிட்டால் மார்பகம், கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என்று கூறுகிறது.

எனெனில் கேரட்டில் ஃபால்கரிநால் எனப்படும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நமது கண்களில் உள்ள ரெட்டினாவின் செயல்பாட்டிற்கு தேவையான விட்டமின் A சத்துக்கள் அதிகமாக இருப்பதால், விட்டமின் A சத்து குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது.

கேரட்டில் கரோட்டினாய்டு சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், கேரட்டை அதிகம் சாப்பிடுவோருக்கு, இதயநோய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

எனவே கேரட்டை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, பக்கவாதம், ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முகப்பருக்கள் மற்றும் சொத்தப் பற்கள் வருவதை தடுக்கிறது. என்று பல ஆய்வுகளில் கூறுகின்றார்கள்.