எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்க்கட்சி பதவியினை துறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
புதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்பதை சகலரும் அறிவர். இருப்பினும் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாத்திரம் அதனை அறியாதுள்ளார்.
எவ்வாறாயினும், மக்கள் விரும்பாத ஒரு அரசியலைமப்பினை எந்த சந்தர்ப்பத்திலும் நிறைவேற்ற முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்று நிறைவேறப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.