பாகிஸ்தானில் இது புதிது: நெருப்பை பயன்படுத்தி சிகை அலங்காரம் செய்யும் வீடியோ!!

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான ஓமர் குரேஷி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் சலூன் கடைக்காரர் ஒருவர் அங்கு முடிவெட்ட வரும் வாடிக்கையாளர்களின் தலையில் கத்திரிக்கோலுக்கு பதிலாக தீமூட்டி முடியை சரிசெய்கிறார்.

முதலில் முடிவெட்டிக்கொள்ள வந்திருப்பவரின் தலையில் கிரீம் மற்றும் பவுடரை தடவி அதில் தீ வைக்கிறார். தீ நன்கு எரிந்து கொண்டிருக்கும் போது சீப்பினால் முடியை வேகமாக சீவுகிறார். அவ்வாறு சீவும் போது எரியும் தீ தானாகவே அணைந்து விடுகிறது.

தலை முடியில் தீ வைத்தாலும் கூட முடி முழுக்கவும் தீப்பற்றி எரியவும் இல்லை, அளவும் குறையவில்லை. முடியை நேர்படுத்துவதற்காக இ்வ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ள சிலர் இது ஆபத்தான விளையாட்டு என எச்சரித்துள்ள வேளையில் இந்த புதிய சிகை அலங்கார கலையை சிலர் ஆதரித்தும் வருகின்றனர்.

அந்த வீடியோ பதிவைக் காண..