அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட ஆறு இலங்கையர்களின் பரிதாப நிலை!!

சுவீடன் நாட்டில் உள்ள இலங்கையர்கள் ஆறு பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு குறித்த ஆறு பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளன.

நாடுகடத்தப்பட்ட குறித்த ஆறு இலங்கையர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.