பன்னீர் செல்வத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

முதல்வராக பொறுப்பேற்ற பன்னர் பன்னீர் செல்வம் கையில் எடுத்த முதல் முயற்சி வெற்றி அடைந்துள்ளது.

பருவமழை பெய்யாத காரணத்தால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆந்திர மாநிலத்திடமிருந்து கிருஷ்ணா நீர் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பன்னீர் செல்வம் ஆந்திரா சென்றுள்ளார்.

அங்கு, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அதிகாரிகளை சந்தித்து பன்னீர் செல்வம் பேச்சு நடத்தினார். தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும்.கிருஷ்ணா நீர் கிடைத்தால் மட்டுமே சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்.

எனவே, ஏப்ரல் வரை தொடர்ச்சியாக, 4 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என, பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில், போதிய நீர் இருப்பு இல்லாததால், 2.5 டி.எம்.சி மட்டும் உடனடியாக வழங்குவதாக ஆந்திர முதல்வர் உறுதி அளித்தார்.மேலும், தமிழக அரசு செலுத்த வேண்டிய பராமரிப்பு கட்டணம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப் பட்டது.

தமிழகம், 443 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என ஆந்திரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைசெலுத்த, தமிழக முதல்வர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

மேலும், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை, ஆந்திரா விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆந்திரா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க முதல்வர் பன்னீர் செல்வம் எடுத்த முதல் முயற்சிக்கு கிடைத்த பலனாக ஆந்திர அரசு, 2.5 டி.எம்.சி தண்ணீர் தர முன் வந்துள்ளது.