ஆங்கிலம் வாசித்த பன்னீர் செல்வம்: அவமானப்படுத்திய சசிகலா?

சென்னையில் இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய தென்னக மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

இந்த மாநாட்டில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட தென்மாநில முதல்வர்கள் மற்றும் பல விஐபிக்களும் கலந்து கொண்டனர்.

விழா தொடங்கிய பின்னர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆங்கிலத்தில் தன் உரையை வாசித்தார். அப்போது சசிகலா விருட்டென்று மேடையை விட்டு கிளம்பினார்.

தலைமைக் கழகத்தில் அவசர வேலையாக அவர் புறப்பட்டதாக காரணம் கூறப்பட்டாலும், தன் கட்சியை சேர்ந்த ஒரு முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே அவர் எழுந்து சென்றது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவ்வாறு சசிகலா நடந்துகொண்டது, முதல்வர் பன்னீர் செல்வத்தை அவமதிக்கும் ஒன்று என அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.