ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் பேரணி நடத்தியது தொடர்பாக நடிகர் ஆனந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் பேரணி நடத்தி இருப்பதை நல்ல தொடக்கமாக நான் பார்க்கிறேன்.
இளைஞர் சமுதாயம் நினைத்தால் எதையும் மாற்ற முடியும், ஜல்லிக்கட்டு ரத்தத்தோடு கலந்த நம் வீர விளையாட்டு.
இதில் காளைகளை துன்புறுத்துதல் என்பது குறைவுதான், இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்தப் போராட்டம் வீணாகாது, ஜல்லிக்கட்டுப் பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது என்று நாம் அப்படியே விட்டுவிட முடியாது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விலங்கு ஆர்வலர்கள் அமைப்பான பீட்டாவிடமே நாம் எல்லோரும் சேர்ந்து இந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்க வேண்டும்.
ஏனென்றால் இந்த பிரச்சனையை நாம் சட்டப்படி அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அதற்கு நீண்ட காலம் எடுப்பதால் பீட்டாவிடமே நாம் கேட்பது தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பயிர்கள் காய்ந்த நிலையில் இருப்பதை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையில் இருப்பவர்களை உறவினர்கள் வயலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.