பொதுமன்னிப்பு காலத்தில் சட்டரீதியாக தம்மை படைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளாத முப்படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்கள், நாட்டில் இருந்து தப்பிச்செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலினை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முப்படையிலும் உள்ள விடுமுறை அனுமதியில்லாமல் சேவைக்கு வராமல் இருந்தவர்களை சட்டரீதியாக சேவையில் இருந்து நீக்குவதற்கான பொதுமன்னிப்புக்காலம் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்தது.
இந்தக்காலத்தில் 34 அலுவலர்கள் உட்பட்ட 9ஆயிரம் படையினர் பொதுமன்னிப்பை பெற்றனர்.