ஆபாச படத்தில் நடிக்க தயாராக இருந்தேன்: கங்கனா ரனாவத்!

‘கேங்ஸ்டர்’ படம் மூலம் நடிகை ஆனவர் கங்கனா ரனாவத். இந்த படத்தில் நடித்ததற்காக 5 விருதுகள் பெற்றார். இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படும் இவர் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

தனது திரையுலக பயணம் குறித்து கங்கனா ரனாவத் கூறுகையில் “நான் சினிமாவில் நடிக்க தயாரானபோது முதலில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. போட்டோ ஷூட்டும் நடத்தினார்கள். உடல் முழுவதும் தெரியும்படி ஒரு உடையை கொடுத்து அணியச் சொன்னார்கள். வேறுவழியில்லாமல் அதை அணிந்தேன். அது ஆபாச படம் என்று தோன்றியது. இந்த படத்தில் நடிப்பது சரிப்பட்டு வருமா என்று யோசித்தேன். என்றாலும், வேறு வழியில்லாமல் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அது நீலப்படம் என்பது தெரிந்தும் நடிக்க இருந்த நேரத்தில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனால் முதலில் ஒப்புக்கொண்ட ஆபாச படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். அந்த படத்தின் தயாரிப்பாளர் கோபப்பட்டார்.

அதையும் மீறி நான் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்தேன். அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் வராமல் இருந்தால் அந்த ஆபாச படத்தில் நடித்து இருப்பேன். என்னைத் தேடிவரும் அனைத்து படவாய்ப்புகளையும் ஏற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு” என்றார்.