நம்முடைய உடலானது தம்மை தற்காத்து, சுத்தப்படுத்திக் கொள்வதற்கு, நுரையீரலில் இருக்கும் காற்றை மூக்கு மற்றும் வாய் வழியாக மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயலை தான் நாம் தும்மல் என்கின்றோம்.
நமது உள் உறுப்புகளில் தேவையற்ற தூசி போன்ற சிறிய துகள்கள் நுழைவதை தடுப்பதற்கு, மார்பு மற்றும் தொண்டை தசைகள் சுருங்கி வாய் வழியாக தும்மலை ஏற்படுத்தி வெளியேற்றுகிறது.
எனவே நம் உடலின் உள்ளே நுழைந்த தூசிகள், துகள்கள் மற்றும் கிருமிகளை தும்மல் வழியாக வெளியேற்றுவதால், தும்மல் வரும் போது அதை அடக்கி வைப்பது மிகவும் ஆபத்தானது.
தும்மலை அடக்குவதால், நமது உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறாமல், உடம்பிலேயே தங்கி பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் நாம் தும்மும் போது, நமது இதயமானது ஒரு மைக்ரோசெகன்ட் நின்று துடிக்கின்றது என்று லண்டனில் உள்ள மருத்துவர்கள் தங்களின் ஆராய்ச்சியின் மூலம் கூறுகின்றார்கள்.