முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வெளிநாட்டு ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் இலங்கை ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு அப்பம் விருந்தொன்றை மஹிந்த வழங்கியுள்ளார்.
அங்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா மற்றும் அமைப்பே காரணம் என மஹிந்த ராஜபக்ச தெரித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி இங்கு தெரிவித்துள்ளார். இந்த அப்ப விருந்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் தமது சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாறியுள்ளனர்.







