2017 இல் அரசை கவிழ்ப்பதே எனது இலக்கு : மஹிந்த ராஜபக்ஸ

2017 ஆம் ஆண்டில் தற்போதைய அரசை கவிழ்ப்பதே தமது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் இன்று நடத்திய சந்திப்பின்போதே மஹிந்த ராஜபக்ஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், தற்போதைய அரசியல் நிலைமைகளை அவதானிக்கும் போது எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இவ்வாறான நிலையில் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.