இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் அமைப்பு உபக்குழுக்களின் பரிந்துரைகள் வெறுமனே யோசனைகள் மாத்திரமே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச இலங்கைப்பேரவையின் உறுப்பினர்களிடம் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக்குழுவினர் கடந்த வியாழக்கிழமையன்று ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளனர். குறித்த உபக்குழுக்களின் பரிந்துரைகளில் ஆளுநர்களின் அதிகாரங்களை கட்டுப்படுத்தல், செனட்சபை போன்றவை உள்ளன.
இவை இலங்கையின் ஒற்றையாட்சி தன்மையை பாதிக்கும் ஏற்பாடுகள் என்று குழுவினர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக அதன் இணைப்பாளர் நுவன் பல்லன்டுடுவாவசெய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
எனினும் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு இடையூறு ஏற்படும் வகையிலான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்று ஜனாதிபதி உறுதியளித்ததாக நுவன் குறிப்பிட்டுள்ளார்.