சிதம்பரம் நடராஜர் ஆலயம் மனிதனோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கோவில் மேற்கூரையில் 2,600 தங்கக் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இது சராசரியாக மனிதன் ஒரு நாளில் சுவாசிக்கும் மூச்சுக்காற்றினைக் குறிக்கிறது. மேலும் அந்த மேற்கூரையில் உள்ள தங்க ஆணிகளின் எண்ணிக்கை 72 ஆயிரம் ஆகும். இவை மனித உடலில் இருக்கும் 72 ஆயிரம் நரம்புகளை உணர்த்துகிறது.
ஆலய கோபுரத்தில் இருக்கும் 9 கலசங்கள் மற்றும் அர்த்த மண்டபத்தில் இருக்கும் 6 தூண்கள் முறையே, 9 சக்திகள், 6 சாஸ்திரங்களை குறிக்கின்றன. இந்த ஆலயம், பூமத்திய ரேகையின் மையப்புள்ளியில் அமைந்துள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.