பாகுபலி படத்தில் நடிக்க உயிரை கொடுக்கவும் தயார்: தமன்னா

‘பாகுபலி’ படத்தில் நடித்த தமன்னா, தற்போது ‘பாகுபலி-2’ல் நடித்து வருகிறார். இது பற்றி கூறிய அவர்…

“என்னுடைய திரைஉலக நிலைமை மோசமானதாக இருந்த போது, பல படங்கள் தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில் ‘பாகுபலி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு கனவு போல இருந்தது. ‘பாகுபலி’ பட வாய்ப்பு நான் எதிர்பாராதது. என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகுபலி 2-ம் பாகத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்.

‘பாகுபலி-2’ படப்பிடிப்பு இந்த மாதம் முடிந்து விடும். பாகுபலி படத்தில் நடிக்க உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.