நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுமாயின் மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை உருவாகும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு காலநிலையில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்க தலைவர் அதுல வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
வறட்சியான காலநிலை காரணமாக நாட்டில் அடிப்படை நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாகவும் மின்சார சபையின் பொறியியலாளர் சங்க தலைவர் கூறியுள்ளார்.
மோசமான காலநிலையால் ஏற்படவுள்ள மின்சார நெருக்கடியை தடுக்கும் முகமாக பல வேலை திட்டங்கள் முன்னெடுத்து வருவதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஸனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.