ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத வகையில் சவால் வெற்றி கொள்ளப்படும்! ஜனாதிபதி

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு சேதம் ஏற்படாத வகையில் நாட்டின் முன் இருக்கும் சவாலை வெற்றி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் வகையில், அரசியலமைப்புடன் சமூக நியாயத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துருகிரிய ஹபரகட ஆர்ய நிகேத்தன பிக்கு பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில இளம் பிக்குமாரின் நடத்தைகளுக்கு முன்னால், பௌத்தர்கள் என்ற வகையில் மிகவும் வருந்தத்தக்க சந்தர்ப்பங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.