கல்முனையில் கடல் ஊருக்குள் வந்துள்ளது. மக்கள் ஓட்டம்?

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3மணியளவில் கல்முனையில் கடல் 100மீற்றரளவில் ஊருக்குள் வந்துள்ளது.இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் அங்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிகாலையில் மக்கள் அலறிக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர்.

பெரியநீலாவணை பாண்டிருப்பு கல்முனை போன்ற இடங்களில் கடற்கரையிலிருந்து 100மீற்றர் தூரம் குடிமனைப்பகுதிக்குள் கடல்வந்துள்ளது.

கல்முனைசுனாமி நினைவுத்தூபி பகுதியையும் தாண்டி ஊருக்கள் கடல்நீர் வந்துள்ளதாக அப்பகுதி சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

இன்னமும் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. வந்தகடல்நீர் இன்னும் திரும்பிச்செல்லவில்லை.kalmuna_1