பெண்ணுக்கு எமனாக வந்த புகையிரதம்!

பாதுக்க – லியன்வல புகையிரத குறுக்கு வீதியில் உந்துருளி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்த அவிசாவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன், உந்துருளி மோதுண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இந்நிலையில் உந்துருளியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.