சென்னை வருகிறார் அஜித். ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி?

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மறைவிற்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய நிலையில் பல்கேரிய படப்பிடிப்பில் இருந்து அஜித், நேற்று காலையில் தனது இரங்கல் அறிக்கையை பல்கேரியாவில் இருந்து வெளியிட்டார்.

இதனால் ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அவர் சென்னை வரமாட்டார் என்றே கூறப்பட்டது. ஆனால் நேற்று அவர் பல்கேரியாவில் இருந்து கிளம்பிவிட்டதாகவும் இன்று சென்னை வந்தடைந்தவுடன் அமரர் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களை நேரில் பார்த்து அவருக்கும் அவருடைய கட்சியினர்களுக்கும் ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.