சுன்னாகத்தில் இரண்டு காற்றாலைகளை அமைக்க அனுமதி!

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு, அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தலா 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த காற்றாலை மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.

சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் இந்த திட்டங்களை சமர்ப்பித்திருந்தார்.

அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை அமைப்பதற்கான கேள்விப்பத்திரங்களை அரசாங்கம் கோரவுள்ளது.

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும், எதிர்கால மின்தேவையை ஈடு செய்யும் நடவடிக்கையாகவும், இந்த இரண்டு காற்றாலை மின்திட்டங்களும் செயற்படுத்தப்படவுள்ளன.

தற்போது, 3900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது, 2020ஆம் ஆண்டு, மின்சார உற்பத்தி ஆற்றலை 4955 மெகாவாட்டாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.