குழந்தைகளை குளிக்க வைக்க இந்த சோப் மட்டும் தான் சிறந்தது!

குழந்தை பிறந்தவுடன் தாயானவளுக்கு குழந்தையை  எப்படி பாதுகாத்து வளர்க்கப் போகிறோம் என்ற பயம் தாய்க்கு தொற்றி விடுகிறது. சிறு குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது.

அதில் உள்ள எண்ணெய்ப் பசையை அதிகமாக எடுத்துவிடக் கூடாது. சிறிது அமிலத்தன்மை உள்ள சோப் குழந்தைகளுக்கு நல்லது. அதிகமாக நுரை இல்லாமலும் இருக்க வேண்டும். நிறம் இல்லாமலும் இருக்க வேண்டும். நிறம் மற்றும் வாசனைக்காக அதிக வேதிப்பொருட்கள் சேர்த்து இருக்கக் கூடாது.

பாசிப்பயிறு, மாவு கடலை மாவு போன்றவை உபயோகித்தால் தோல் கடினத் தன்மையை அடைகிறது. அதிக மஞ்சள் பூசினாலும் தோல் உலர்ந்து கெட்டிப்படுகிறது. சீயக்காய் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும். குளிப்பாட்டும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.