திருமணம் ஆன ஒரே நாளில் யுவராஜ் சிங் மனைவிக்கு இப்படி ஒரு எச்சரிக்கையா?

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ்சிங், பாலிவுட் நடிகையான ஹசல் கீச்சை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சண்டிகரில் உள்ள பிரபல ஹொட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யுவராஜ் சிங் தன்னுடைய திருமண புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், யுவராஜ்சிங்கின் தம்பி மனைவியான ஆகான்ஷா சர்மா திருமண தம்பதிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், யுவராஜ்சிங் ஒரு நல்ல மனிதர் என்றும் இவரை திருமணம் செய்து கொள்வதற்கு ஹசல் கீச் கொடுத்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஹசல் கீச்சுக்கு, யுவராஜ் சிங்கின் அம்மா(முன்னாள் மாமியார் ஷப்னமின்) தலையீடு இல்லாமல் தனியாக வாழ பிரார்த்திக்கிறேன்.

யுவராஜ்சிங் என்னுடைய கணவர் போல் இல்லை என்றும், அவர் தன் தாயின் தலையீடு இல்லாமல் அனைத்து முடிவுகளையும் எடுப்பார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் மூன்று நாட்களுக்கு மேல் டெல்லியில் தங்கமாட்டார் அதனால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது எனவும் கூறியுள்ளார்.

ஆகான்ஷா சர்மா யுவராஜ்சிங்கின் தம்பி மனைவி ஆவார். இவர் அண்மையில் யுவராஜ்சிங்கின் அம்மா தன்னை குழந்தை பெற்றெடுக்க வற்புறுத்துவதாக கூறி விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.