நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்

தென் இந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் கூடியது. நடிகர் சங்க வளாகத்தில் தொடங்கிய இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

அப்போது ஏற்கனவே தற்காலிகமாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோரை நிரந்தரமாக நீக்கம் செய்ய பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ராதிகா சரத்குமார், ‘‘சட்டப்படி இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது’’ என்றார்.

பின்னர் விஷால் பேட்டி அளிக்கையில் பொதுக்குழு கூட்டம்  சட்டப்படி தான்  நடைபெற்றது என்று கூறினார்.