ஜெயலலிதாவைத் தொடர்ந்து சசிகலாவிற்கு உடல்நலக்குறைவு

முதல்வர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதங்களாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தோழி சசிகலா அன்புடன் கவனித்து வருகிறார்.

இதனால் மிகுந்த மனசோர்வுடனும், உடல் சோர்வுடனும் இருந்த சசிகலாவிற்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம்.

இதைத் தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துள்ளார் சசிகலா.

தற்போது இந்த விடயம் அதிமுக அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.