உலகப் புகழ் பெற்ற ஈபில் டவர் 5 மில்லியன் யூரோவுக்கு ஏலம்?

உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரில் உள்ள 14 இரும்பு படிக்கட்டுகள் 5 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவர் கட்டுமானம் 1887 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1889 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.

முழுவதும் இரும்பினால் கட்டப்பட்ட இதன் ஒட்டுமொத்த உயரம் 324 மீற்றர்கள் ஆகும். 1983ல் ‘லிப்ட்’ வசதி செய்யப்பட்டதால், அதுவரை இங்கு பயன்படுத்தி வந்த இரும்பிலான படிக்கட்டுகள் 24 பகுதிகளாக வெட்டி எடுக்கப்பட்டு பாரிசில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

அவை கடந்த 1983-ஆம் ஆண்டில் இருந்து ஏலம் விடப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஏலத்தில் இதன் 14 இரும்பு படிக்கட்டுகள் 523,800 யூரோ (இலங்கை மதிப்பில் ரூ.8,24,680,14 கோடி) தொகைக்கு ஏலம் விடப்பட்டது.

ஏலத்தை நடத்திய பிரான்கோயஸ் டாஜன் கூறுகையில், தொலைபேசி மூலமாகவும் ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. இது பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்களுக்கு இருக்கும் பாரம்பரியத்தின் மீதான ஆர்வத்தை காட்டியது என்றார்.

இதற்கு முன் 2013 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் 19 படிகள் 220,000 யூரோ தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

ஈபிள் டவர் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 41 வருடங்களாக உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் அல்லது கோபுரம் என்ற பெயருடன் விளங்கியது குறிப்பிடத்தக்கது.