தனுஸ் யாருடைய மகன்? 65 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்!

ஜீவனாம்சம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நடிகர் தனுஷ், ஜனவரி 12 ஆம் தேதி ஆஜராக மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தங்களுக்கு 3-வது மகனாக பிறந்த தனுஷ், பதினொன்றாம் வகுப்பு பயின்ற போது சென்னைக்கு ஓடி விட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திரைப்படத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டு அவரை பார்க்க முயற்சித்தும் முடியவில்லை என கூறினர். தற்போது உடல்நிலை சரியில்லாமலும் ஏழ்மை நிலையில் இருப்பதால் மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி மாதம் 12 ஆம் தேதி திரைப்பட நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.