காதலியிடம் காதலன் நடத்திய நாடகம்?? இதுவா அது….

எதிர்­பா­ராத தரு­ணத்தில், தமது காத­லியை திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்பம் வெளி­யி­டு­வ­தற்கு (புர­போஷல்) பல்­வேறு உபா­யங்­களை கையாண்­ட­வர்கள் பற்றி அறிந்­தி­ருப்போம்.

ஆனால், நைஜீ­ரி­யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் இறந்­து­விட்­டதைப் போல் நடித்து, காத­லியை கத­றி­யழ வைத்த பின்னர், அவரை திரு­மணம் செய்­வ­தற்­கான புர­போஷல் செய்­துள்ளார்.

இந்த இளைஞர் வீதி­யோ­ரத்தில் இறந்­து­கி­டப்­பதைப் போல் படுத்துக் கிடந்­த­போது, இந்த இளைஞர் இறந்­து­விட்­ட­தாக அவரின் காத­லி­யிடம் கூறப்­பட்­டது.

அதை­ய­டுத்து, அந்த யுவதி ஓடி வந்து மேற்­படி இளை­ஞரை கட்­டிப்­பி­டித்துக் கொண்டு கத­றி­யழ ஆரம்­பித்தார். அக் ­காட்­சியை சிலர் படம்­பி­டித்துக் கொண்­டி­ருந்­தனர்.

சிறிது நேரத்தின் பின்னர் அந்த இளைஞர் திடீ­ரென எழுந்­தி­ருக்க, அவரின் காத­லியும் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்து துள்ளி எழுந்தார்.

அதன்பின் தனது காதலன் உயி­ருடன் இருப்­பதை அறிந்து அந்த யுவதி ஆனந்த கண்ணீர் வடித்­துக்­கொண்­டி­ருந்­த­போது, முழந்­தா­ளிட்டு, அவரை திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை வெளி­யிட்டார் மேற்­படி இளைஞர்.

இதன்­போது பதி­வா­கிய வீடி­யோவை இணை­யத்தில் ஏரா­ள­மானோர் பார்­வை­யிட்­டுள்­ளனர். இது உலகிலேயே மிக மோசமான புரபோஷல் ஒன்று என சிலர் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.