யாழ். மக்களின் அதிரடி நடவடிக்கை…! மெய்சிலிர்த்து போன பசில் ராஜபக்ச

புதிய கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து உறுப்பினர்கள் வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைப்பதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவிலும் தேமது புதிய கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது உறுப்புரிமையை நல்லாட்சி அரசாங்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்க வேண்டும் என சிந்தித்தோம்.

இதன்படி, யாழ்ப்பாணத்தின் பங்குப்பற்றல் முக்கியமானதாகும். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தலை எதிர்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.