வவுனியாவில் மாவீரர் தினத்தை நடத்தவிடாமல் படைத்தரப்பினர் எதிர்ப்பு

வவுனியாவில் மாவீரர் தின நிகழ்வுகளை மக்கள் கடைப்பிடிக்க விடாமல் செய்வதற்கு படைத்தரப்பினர் மக்களுக்கு எதிரான பல நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05மணியளவில் உயிர்நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், படையினரால் பல களியாட்ட நிகழ்வுகளை நடாத்த வவுனியாவில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனது என அறிவிக்கப்படுகின்றது.

மேலும் பொதுமக்கள் படையினரின் நிகழ்வுகளைப் புறக்கணித்து தமது உறவுகளை பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் எமது வீரமறவர்களான மாவீரர்களை நினைவு கூர ஒன்றிணையுமாறு வவுனியா மாவட்ட சமூக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.